கீழக்கரை
| Kilakarai | |||||||
| — Town — | |||||||
| அமைவிடம் | 9°14′N 78°47′E / 9.23°N 78.78°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | இராமநாதபுரம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சி தலைவர் | ராபியத்துல் கதரியா | ||||||
| மக்கள் தொகை | 30,472 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 8 மீட்டர்கள் (26 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
கீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[4][5][6]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
அமைவிடம்
கீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும்.
அந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.
இங்குள்ள பார்களில் சங்கு, முத்துச்சிப்பி, வண்ணமீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27¢code=0006&tlkname=Ramanathapuram#MAP
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=%27Tiruppullani%27&dcodenew=23&drdblknew=4
- ↑ http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=27&tlkname=Tiruppullani®ion=4&lvl=block&size=1200
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
பார்க்கவும்