வடமதுரை
Jump to navigation
Jump to search
வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டுக்கல்லிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 18,010 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக திருமதி. நிருபாராணி கணேசன் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்.