சித்தையன்கோட்டை
Jump to navigation
Jump to search
சித்தையன்கோட்டை (ஆங்கிலம்:Sithayankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியானது 4 வருவாய் கிராமங்களைக் கொண்ட பேருராட்சியாகும். சித்தையன்கோட்டை பேருராட்சி ஜம்மு காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை NH 45 வழித்தடத்திலும் திண்டுக்கல்- தாண்டிக்குடி வழித்தடத்தில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 13,619 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 17.25 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.