பத்மா சுப்ரமணியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பத்மா சுப்ரமணியம்
பத்மா சுப்ரமணியம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பத்மா சுப்பிரமணியம்
பிறந்ததிகதி 4 பிப்ரவரி 1943
பணி நடனம், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், நடன ஆசிரியை, எழுத்தாளர்
தேசியம்  இந்தியா
குடியுரிமை இந்தியர்
பெற்றோர் கே. சுப்பிரமணியம்-எஸ். டி. சுப்புலட்சுமி

பத்மா சுப்ரமணியம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை) தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்.[1]

குடும்பம்

இவரது தந்தை கே. சுப்பிரமணியம், தாய் எஸ். டி. சுப்புலட்சுமி, சகோதரர் எஸ் வி இரமணன் ஆகியோர் தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள். பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார்.

கல்வி

பத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

விருதுகள்

மேற்கோள்கள்

பிற இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=பத்மா_சுப்ரமணியம்&oldid=4979" இருந்து மீள்விக்கப்பட்டது