ஆள்கூறுகள்: 8°57′32″N 77°47′43″E / 8.9587558°N 77.7953053°E / 8.9587558; 77.7953053

கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Senaiyaar
imported>CommonsDelinker
Replacing AUM_symbol,_the_primary_(highest)_name_of_the_God_as_per_the_Vedas.svg with File:Om_symbol.svg (by CommonsDelinker because: file renamed, redirect linked from other project).
வரிசை 42: வரிசை 42:


==சமயங்கள் ==
==சமயங்கள் ==
[[Image:AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg|17px]] [[கோயில்|இந்துக் கோயில்கள்]]
[[Image:Om symbol.svg|17px]] [[கோயில்|இந்துக் கோயில்கள்]]


1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் [[கோயில்]].
1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் [[கோயில்]].

04:21, 20 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

கயத்தாறு
—  பேரூராட்சி  —
கயத்தாறு
இருப்பிடம்: கயத்தாறு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°57′32″N 77°47′43″E / 8.9587558°N 77.7953053°E / 8.9587558; 77.7953053
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் கோவில்பட்டி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,400 (2011)

1,669/km2 (4,323/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.23 சதுர கிலோமீட்டர்கள் (2.41 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kayathar

கயத்தாறு (ஆங்கிலம்:Kayatharu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கோவில் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கயத்தாறு பே%ராட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் துhக்கிலிடப்பட்ட இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இதன் அருகமைந்த நகரங்கள், வடக்கில் கோவில்பட்டி 30 கிமீ, தெற்கில் திருநெல்வேலி 30 கிமீ, கிழக்கில் தூத்துக்குடி 55 கிமீ. அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள குரும்பூர் ஆகும்.

6.23 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,799 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 10,400 ஆகும்[5]

வரலாற்று நிகழ்வுகள்

பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டோபர் 16 , 1799, அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.

கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூணைக் காணலாம்


வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் அக்டோபர் 16 1970 ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சிலை நிறுவப்பட்டு, நீ. சஞ்சீவ ரெட்டி விழாத் தலைவராகவும், மற்றும் காங்கிரசு பெருந்தலைவர் கு. காமராசரால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.இங்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது.

வேளாண்மை சிறப்புகள்

சந்தைகள் : இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் காய் கறிகள், தானியங்கள், கனி வகைகள், மற்றும் இறைச்சி வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் பசுமாடுகள், ஆடு, கோழிகள், என மிருகங்கள் சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 கிராமங்களின் மக்கள் வருகைத்தருகின்றார்கள்.

குட்டி குளம்

இங்கு மழைக் காலங்களில் மழை நீர் இந்த நீர் நிலையில் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்காகவும் மற்றும் மேச்சல் கால் நடைகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றது.

தொழில்கள்

இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய தொழில்சாலையும், இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் காற்றாலை உள்ளது. இதையேற்று மத்திய அரசின் ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் திறந்து வைத்தார்.[சான்று தேவை]

சமயங்கள்

இந்துக் கோயில்கள்

1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் கோயில்.

2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் மன்னர்கள் ஆட்சி காலகட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.

3)கயத்தாறு ஆத்தங்கரை சுடலை மாடன் சாமி கோயில். இந்த கோவிலின் கொடைத் திருவிழா வருடாவருடம் ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.

4)அருள்மிகு ஸ்ரீ நல்ல அய்யனார் கோவில் - 133 கிராம சேனைத்தலைவர்க்கு பாத்தியப்பட்ட இத்திருக்கோவில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது

5)அருள்மிகு காந்தாரி அம்மன் திருக்கோவில் - ஊர் பொதுக்கோவில் , கயத்தாறு ஊரின் நடுவில் அமைந்துள்ளது , வருடத்திற்கு ஒரு முறை அணைத்து இனத்தை சேர்ந்த மக்களாலும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

தேவாலயம்

1)புனித லூர்த் மாதா தேவாலயம். இது ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.

2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.

மசூதி(பள்ளி வாசல்)

இந்த ஊரில் புகழ்பெற்ற மசூதி(பள்ளி வாசல்) ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. கயத்தாறு பேரூராட்சியின் இணையதளம்
  5. கயத்தாறு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கயத்தாறு&oldid=196390" இலிருந்து மீள்விக்கப்பட்டது