எட்டயபுரம்
எட்டயபுரம் | |||||||
— பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 9°09′00″N 77°58′59″E / 9.15°N 77.983°ECoordinates: 9°09′00″N 77°58′59″E / 9.15°N 77.983°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தூத்துக்குடி | ||||||
வட்டம் | எட்டயபுரம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஜி. லட்சுமிபதி, இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சி மன்றத் தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
12,772 (2011[update]) • 730/km2 (1,891/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
17.5 சதுர கிலோமீட்டர்கள் (6.8 sq mi) • 60 மீட்டர்கள் (200 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/ettayapuram |
எட்டயபுரம் (Ettayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார்.[5]
அமைவிடம்
பேரூராட்சி அமைப்பு
வரலாறு
மக்கள் தொழில்
நெசவுத் தொழில்
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பெட்டித் தொழில்
நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை
தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம்.
பாரதியின் பிறப்பிடம்
எட்டப்பன்
சுற்றுலா
இவ்வூரில் காணத்தக்க இடங்கள்
- பாரதி நினைவு மணி மண்டபம்[5]
- பாரதி பிறந்த வீடு
- முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்
- உமறுப் புலவர் தர்கா
- எட்டப்பன் அரண்மனை
- மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை
அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள்
- வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி.
- எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான்.
- கட்டபொம்மன் நினைவிடம் - கயத்தாறு.
- அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் - எப்போதும் வென்றான்