பெருங்குளம்
பெருங்குளம் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
வட்டம் | ஸ்ரீவைகுண்டம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | ஜி. லட்சுமிபதி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 7,203 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.townpanchayat.in/perungulam |
பெருங்குளம் (ஆங்கிலம்:Perungulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இங்கு வரலாற்று புகழ் பெற்ற அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு திருவழூதீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள்; கிழக்கில் ஏரல் 5 கிமீ, மேற்கில் ஸ்ரீவைகுண்டம் 10 கிமீ, வடக்கில் சாயர்புரம் 7 கிமீ, தெற்கில் மணவாளக்குறிச்சி 3 கிமீ. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது.
20.48 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 122 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,766 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 7,203 ஆகும்[5][6]