மாணிக்கம் விற்ற படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாணிக்கம் விற்ற படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினேழாவது படலமாகும்.[1]

திருவிளையாடல்

வீரபாண்டியனின் மரணத்திற்குப் பிறகு அவரின் மகனான செல்வ பாண்டியனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்தனர். அதற்குக் கிரீடம் செய்ய விலைமதிப்பு மிக்க நவரத்தின கற்களைச் சிவபெருமானே வைர வியாபாரியாக வந்து அளித்தார். அத்துடன் செல்வ பாண்டியனுக்கு அபிசேகப் பாண்டியன் என்ற பட்டப் பெயரையும் சூட்டும்படி கூறினார். செல்வ பாண்டியனின் முடிசூட்டு விழா நடந்த பின்பு வியாபாரியாக வந்தது சிவபெருமான் என்பதை அறிந்தனர்.

காண்க

ஆதாரங்கள்

  1. http://www.tamilvu.org/slet/l41d0/l41d0lft.jsp திருவிளையாடற் புராணம் - தமிழாய்வு தளம் பார்த்த நாள் செப்டம்பர் 16 2013
"https://tamilar.wiki/index.php?title=மாணிக்கம்_விற்ற_படலம்&oldid=18426" இருந்து மீள்விக்கப்பட்டது