சங்கரன்கோயில் வட்டம்
Jump to navigation
Jump to search
சங்கரன்கோவில் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் சங்கரன்கோவிலில் உள்ளது. இது தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய வருவாய் வட்டம் ஆகும்.
இந்த வட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், வீரசிகாமணி, சேர்ந்தமங்கலம், குருக்கள்பட்டி, என 5 குறுவட்டங்களும், 44 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]
இவ்வட்டத்தில் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
சமயம்
- இந்துக்கள் = 92.14%
- இசுலாமியர்கள் = 2.18%
- கிறித்தவர்கள் = 5.58%
- பிறர்= 0.10%