பாராரிக்கூத்துக்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாராரிக்கூத்துக்கள்
பாராரிக்கூத்துக்கள்
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் ச. பொன்னுத்துரை
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
பிரிதா
உண்மையான
தலைப்பு
பாராரிக்கூத்துக்கள்
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
பாராரிக்கூத்துக்கள்
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
2
பொருண்மை குடும்ப வாழ்க்கை
வெளியிடப்பட்டது 1வது பதிப்பு,
ஜனவரி 2014
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 210
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
978-93- 81322-27-7
முன்னைய
நூல்
ஒரு துளி நிழல்
அடுத்த
நூல்
மானிடம் வீழ்ந்ததம்மா

ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் விழும் சிக்கல்கள் ஆண்டவனுக்கும் சவால்விடும் புதிர். மனப்பொருத்தங்கள் இல்லாத வாழ்விற்குள் அகப்பட்டு, கணங்களை யுகங்களாக அநுபவித்து உழலும் ஆயிரம் ஆயிரம் உள்ளங்கள். இனப்பெருக்கம் மாத்திரமே வாழ்வு என்றால் எமக்கெதற்கு குடும்பங்கள்? உடலுறவு இல்லாத காதல் இருக்கலாம். காதலே இல்லாத உடலுறவை எப்படி அழைப்பது? ஐரோப்பாவின் பொருளாதார அமைப்பு, சுதந்திரத்தையும் போராடும் துணிவையும் தந்தாலும், காதலால் பிணைந்திராத ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவை எப்படி எதிர்கொள்கிறது. அத்தோடு ஐரோப்பிய வாழ்வு சொர்க்கமா நரகமா?.

நோர்வே நாட்டுக்குப் பல பெருமைகள் உள்ளன. தனிநபர் வருவாய் அதிகம் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் நோர்வேயும் ஒன்று. அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு. சமத்துவ, சமூகநலன் சார்ந்த கொள்கைகள் கொண்ட நாடு. இந்த சொர்க்கபுரியின் மற்றொரு பக்கத்தை ஆசிரியர் இந்நாவலில் ஆரவாரமின்றித் திரைநீக்கம் செய்துவைத்துள்ளார். நோர்வேயில் ஈழத்தமிழர் மட்டுமல்ல, பாக்கிஸ்தான், போலந்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்து இங்கே வாழ்கின்றார்கள் இவர்கள் புலம்பெயர்ந்தோரா அல்லது பராரிகளா என்ற கேள்விக்கு இந்நாவல் விடைகாண முயல்கின்றது. பலரின் போலி நம்பிக்கைகளை இந்நாவல் தகர்த்தெறிந்துள்ளது. ஒஸ்லோ என்னும் மாநகரின் பகட்டுத் திரைகளுக்குப் பின்னால் நடக்கும் ஒன்பது அவலங்களை ஒரு மனிதனின் அன்றாட வாழ்வினூடாக, அவன் பார்வையூடாக சொல்லவிளைகின்றது இந்நாவல்.

"https://tamilar.wiki/index.php?title=பாராரிக்கூத்துக்கள்&oldid=16219" இருந்து மீள்விக்கப்பட்டது