கடூழியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கடூழியம்
கடூழியம்
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
உண்மையான
தலைப்பு
கடூழியம்
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
கடூழியம்
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை
வெளியிடப்பட்டது Jul 3, 2021
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 125
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781105027338
முன்னைய
நூல்
மதுவின் இரகசியம்
அடுத்த
நூல்
உறைவி

நல்லதோர் வீணைசெய்தே-அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

இயற்கை தன்னை வாழவைத்துக் கொள்ளப் பெண்ணை வஞ்சித்திருப்பது யதார்த்தம். அந்த யதார்த்தத்தை உணர்ந்து ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது மனிதாபிமானம் உள்ள ஒவ்வொரு ஆணின் கடமையுமாகும். அதை சில நாடுகள் ஓரளவு செவ்வனே செய்துள்ளன.

நோர்வேயும் அந்த நாடுகளில் ஒன்று. இது உன்னதமான மனிதத்தைப் பேணும் நடவடிக்கையாகும். பூவுக்குத் தலை ஆணுக்குப் பெண் என்பது போல இந்த உன்னதமான முன்னேற்றத்திற்கு ஒரு மறு பக்கமும் உண்டு.

நல்ல சட்டங்களை அல்லது அதில் இருக்கும் ஓட்டைகளை மனித மூளைகள் கச்சிதமாய் பயன்படுத்திக் கொள்ளும். அதில் ஆண் பெண் என்கின்ற வேறுபாடு கிடையாது. இந்த உன்னதமான சட்டங்கள் பெண்களைப் பாதுகாக்கும் அதே நேரம் சில ஆண்களைப் பாதிக்கிறது என்பதும் உண்மையே.

அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதே கடூழியத்தின் கதை.

இன்று கொரோனா என்கின்ற கொடிய வருத்தம் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. பல நாடுகள் அதன் தாக்கம் தெரியாது பொருளாதாரத்தை மட்டுமே எண்ணுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. முதலில் நோய்க்கு எதிராக முழுப் பலத்துடன் போராட வேண்டும் என்பது மிகவும் அவசியம். அதற்காகப் பொருளாதாரத்தை முற்றுமாகக் கைவிடுதல் என்று பொருளாகாது. ஆனால் அமரிக்கா, இந்தியா, பிரேசில் இத்தாலி போன்ற பல நாடுகளில் நடந்தது போன்ற பேரவலங்களைத் தடுக்க வேண்டும்.

கொரோனா தனது முழுப் பலத்தையும் காட்ட முதல் எழுதப்பட்ட கதை இது. இன்றும் அது காட்டிவிட்டதா என்பது கேள்வியே. அதன் பிடிக்குள் அகப்பட்டும் ஒரு மனிதனின் அல்லாடலே இந்தக் கதை.

கொரோனா தாக்கத்தின் போது உலகம் எப்படி அநீதியைத் தன்னுள் பதுக்கி வைத்திருக்கிறது, மனிதர்கள் எவ்வளவு சுயநலத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அதற்கு நேர்மாறாக தங்கள் உயிரையும் தியாகம் செய்து மனிதர்களைக் காப்பாற்றும் மதர்களையும் காணமுடிந்தது.

இனியாவது சுயநலத்தோடு நடப்பவர்கள் மாறுவார்களா? மாற வேண்டும்.

உலகத்தில் உயிரினங்கள் தோன்றியது தொடக்கம் இப்படியான அச்சுறுத்தல் இருந்திருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது ஊகம். இயற்கை தன்னைத் தானே செப்பனிடும் முறை இது. அந்த இயற்கையில் உதித்த மனிதன் அதனைக் கைக்கொள்ள நினைத்தது விபரீதமே. அதனால் கூட அதன் சில கடுமையான கோலங்களை அது காண்பிப்பதாக இருக்கலாம்.

ஆனால் மனிதனால் இயற்கை மீது மேற்கொள்ளப்படும் அளவுக்கு மீறிய குறுக்கீடு வருங்காலத்தில் பெரும் விளைவுகளை உண்டு பண்ணலாம். அதனால் ஒட்டு மொத்த மனித இனத்திற்கே பாதிப்பு ஏற்படலாம். மனிதர்கள் இனியாவது அதை விளங்கிக் கொண்டு அதற்கேற்ப நடக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. எனது அவாவை இந்த மனித இனம் ஏற்றுக் கொள்ளுமா?

"https://tamilar.wiki/index.php?title=கடூழியம்&oldid=16230" இருந்து மீள்விக்கப்பட்டது