தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
Jump to navigation
Jump to search
நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.
காலம்
நெடுஞ்செழியனைக் குறிக்கும் அடைமொழித் தொடர்கள்
நெடுஞ்செழியன் வெற்றிகள்
வெற்றிக் குறிப்புகள்
- கூடல் பறந்தலையில் இருபெரு வேந்தரை வென்றது [5]
- இருபெரு வேந்தரும் வேளிரும் சாயப் போரிட்டு வென்றவன் [6]
- தன்னைத் தாக்கிய ஒன்றுமொழி வேந்தரின் முரசுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.[7]
- பகைவர் நாட்டுக்கே துரத்திச் சென்று வென்றான்.[8]
- சேரநாட்டு முசிறியில் சேரரை வென்றது [9]
- குட்டுவர் (சேரர்) பலரை வென்றவன். “பல்குட்டுவர் வெல்கோவே” [10]
- ஆலங்கானம் என்னும் தலையாலங்கானத்தில் எழுவரை ஓட்டியது [11]
- இயல்தேர்ச் செழியன் ஆலங்கானத்து எழுவரை வென்றான்.[12]
- எழுவரை வென்றோன் – புலவர் இவனைத் தழுவினார் குடபுலவியனார் [13]
- நாடுகெழு திருவின் பசும்பூண் செழியன் – எழுவரைத் தனியனாக வென்றான்.[14]
- இளமையிலேயே வென்றான்.[15]
- செழியன் பாசறையில் வாள் மின்னியது[16]
- கொடித்தேர்ச் செழியன் எழுவரை வென்றான்[17]
- இவனைத் தாக்கியவர்கள் பலர்.[18]
- மிழலை நாட்டு எவ்வியை வென்றது, முத்தூறு வேளிரை வென்றது [19]
- ஆய் குலத்தவரின் கீழிருந்த குற்றாலத்தை வென்றான்[20]
- நெல்லின் ஊர் பகுதியை வென்றான்[21]
- முதுமலைப் பகுதியை வென்றது[22]
- பலர் மதில்களை அழித்தது[23]
- தென்பரதவர் என்ற நெய்தல் மன்னர்களை வென்றான்.[24]
- முதுவெள்ளிலை வென்றான். இந்நகரம் நெய்தல் நில வளமும் மருதம் நில வளமும் மிக்கதாகும்.[25]
- விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை ஓட ஓட விரட்டினான்.[26]
நெடுஞ்செழியனுக்கு அறிவுரை
- அடுபோர்ச் செழியன் – நீர்நிலைகளைப் பெருக்கவேண்டும் என இவனைப் புலவர் வேண்டுகிறார் [27]
அடிமைகொள் வேள்வி
- மன்னர் இவனுக்கு ஏவல் செய்யும் புதுமையான வேள்வியை இவன் செய்தான். புறம் 26,
வள்ளண்மை
- வாள் வீரர்களுக்கு
- கொற்றச் செழியன் வாள்வீரர்களுடன் சென்று போரிட்டு வென்றபோதெல்லாம் பாணர்கள் களிறுகளைப் பரிசாகப் பெற்றனர்.[28]
- புலவர் ஒருவர் இவனைப் பாடி இவன் கழுத்திலிருந்த முத்தாரத்தையும், இவன் ஏறிவந்த யானையையும் பரிசிலாகப் பெற்றார்.[29]
- பாணர்க்கும் பாட்டியர்க்கும் தேரும் யானைகளும் வழங்கியவன் [30]
- கருணை உள்ளம்
- போர்ப் பாசறையில் இவனது படை காயம் பட்டுக் கிடந்ததைக் கருணை உள்ளத்தோடி இரவெல்லாம் தூங்காமல் தேற்றினான்.[31]
முன்னோர்
- கடல்வெள்ளம் கொண்ட முன்னோரின் வழிவந்தவன் “நல்லூழி அடி படரப் பல்வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக” [32]
- நிலந்தரு திருவின் பாண்டியன் வழியில் வந்து ஆண்டவர்களில் போர்யானை போன்றவன் [33]
ஆட்சி
- உழவர்க்குக் ‘காவுதி’ என்னும் பட்டம் வழங்கியவன் [34]
- சிறந்த போர் வீரர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைப் பூ (இக்காலப் பத்மஸ்ரீ போன்றது) சூட்டிப் பாராட்டியவன் [35]
- பழிக்கு அஞ்சுபவன். ஈகையால் வரும் புகழை விரும்புபவன்.[36]
- அறங்கூறு அவையம் நிறுவி நீதி வழங்கியவன் [37]
- ஆட்சிக்கு உதவியாக ‘நாற்பெருங்குழு’ வைத்திருந்தவன் [38]
- ஐம்பெருங்குழுவாக ஐந்து அரசர்களை வைத்துக்கொண்டு அரசாண்டவன் [39]
- கண்ணுள் வினைஞர் (ஓவியர்), கம்மியர் முதலான கலைஞர்களைப் போற்றியவன் [40]
- மதுரையில் ‘ஓண நன்னாள்’ (திருவோணத் திருநாள்) கொண்டாடியவன் [41]