சலுப்பபட்டி
Jump to navigation
Jump to search
சலுப்பபட்டி | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | தேனி |
மக்களவை உறுப்பினர் |
இரவீந்திரநாத் குமார் |
சட்டமன்றத் தொகுதி | உசிலம்பட்டி
- |
சட்டமன்ற உறுப்பினர் |
பி. அய்யப்பன் (அதிமுக) |
மக்கள் தொகை | 3,481 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சலுப்பபட்டி (Saluppapatti) என்பது மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். இந்தக் கிராமம் மதுரையிலிருந்து மேற்கில் 45 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் அமைந்துள்ளது. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாப்டூர் பாளையத்துகுட்பட்ட ஒரு கிராமமாக இருந்தது. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊரிலிருப்பவர்களில் எண்பது விழுக்காடு இளைஞர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ராணுவத்தில் பணியாற்றச் செல்வதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.