ஆள்கூறுகள்: 9°50′N 77°19′E / 9.83°N 77.32°E / 9.83; 77.32

கோம்பை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sathyaprasanna பயனரால் செய்யப்பட்ட 05:48, 2 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (வரலாறு)
Jump to navigation Jump to search


கோம்பை
—  நகரம்  —
கோம்பை
அமைவிடம்: கோம்பை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°50′N 77°19′E / 9.83°N 77.32°E / 9.83; 77.32
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சிமன்றத் தலைவர் என். எஸ். வி. கே. பவித்ரா
மக்கள் தொகை

அடர்த்தி

12,820 (2001)

668/km2 (1,730/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

19.2 கிமீ2 (7 சதுர மைல்)

399 மீட்டர்கள் (1,309 அடி)

குறியீடுகள்

கோம்பை (Kombai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் கோம்பை நாய் வகைக்குப் பெயர்பெற்றதாகும்

வரலாறு

நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் கோம்பை ஒன்று.இப்பாளையம் கன்னட மொழி பேசும் வொக்கலிக கவுண்டர்களால் ஆட்சி செய்ய பட்டுள்ளது .[3] அவர்களது வம்சாவழிகளான கோம்பை ஜமீன்தார் திரு.அப்பாஜி ராஜ்குமாரும் மற்றும் இளைய ஜமீன்தார் திரு.அப்பாஜி லோகதுரை அவர்களும் கோம்பை அரண்மனையில் வாழ்ந்து வருகிறார்கள்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°50′N 77°19′E / 9.83°N 77.32°E / 9.83; 77.32 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399 மீட்டர் (1309 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ஏலமலைகளையும் கிழக்கே சாலைமலைக்குன்றையும் கொண்டு இடையே அமைந்துள்ளது. உத்தமபாளையம் போடிநாயக்கனூர் சாலை வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,820 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கோம்பை மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோம்பை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சமூகம்

பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். கிறித்தவர்களும் இசுலாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மேற்குமலை அடிவாரத்தில் 400 ஆண்டுப் பழைமையான திருமலைராயப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் வைணவக் கோவில் தேர்களுள் இரண்டாவது பெரியதாகும். 150 ஆண்டுப் பழைமையான சிறீ கன்னிகா பரமேசுவரி பள்ளிகள் ஊருக்குத் தெற்கே உள்ளன.

பொருளாதாரம்

முதன்மைத்தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. தென்னை, காய்கறிகள், நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன. வெள்ளிதோறும் ஊருக்குக் கிழக்கே வாரச்சந்தை கூடுகிறது. இது இன்றளவும் உயிர்ப்புடன் உள்ள சிற்றூர்ச்சந்தைகளுள் ஒன்றாகும். சுற்றுவட்டாரங்களில் மஞ்சள்காமாலை நாட்டு மருத்துவத்துக்குப் பெயர்பெற்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
  4. "Kombai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோம்பை&oldid=197768" இலிருந்து மீள்விக்கப்பட்டது