கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
| வரிசை 25: | வரிசை 25: | ||
== கல்விக்கூடங்கள் == |
== கல்விக்கூடங்கள் == |
||
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,kalaviruthi high school, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. சேகனாதபுரம் க.உ.ஓ ஆரம்பப்பள்ளி பல ஆசிரியர்களை உருவாக்கிய பள்ளி |
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,kalaviruthi high school, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. சேகனாதபுரம் க.உ.ஓ ஆரம்பப்பள்ளி பல ஆசிரியர்களை உருவாக்கிய பள்ளி.பேச்சாளர்கள், முதலாளிகள், பலர் உள்ளனர். முசுலீம் ,இந்து ஒற்றுமை வாழ்கின்றனர்... |
||
கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது. |
கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது. |
||
19:14, 13 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
| கமுதி | |||||||
| அமைவிடம் | 9°25′11″N 78°22′12″E / 9.4197°N 78.37°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | இராமநாதபுரம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை | 13,135 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
கமுதி (ஆங்கிலம்:Kamuthi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் 7 பேரூராட்சிகளில் ஒன்றாகும்.[4]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். கமுதி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கமுதி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கமுதி சந்தை
அம்பேத்கர் வாரச்சந்தை என்ற பெயரில் கமுதியில் வாராவாரம் செவ்வாய் கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர்.
கல்விக்கூடங்கள்
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,kalaviruthi high school, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. சேகனாதபுரம் க.உ.ஓ ஆரம்பப்பள்ளி பல ஆசிரியர்களை உருவாக்கிய பள்ளி.பேச்சாளர்கள், முதலாளிகள், பலர் உள்ளனர். முசுலீம் ,இந்து ஒற்றுமை வாழ்கின்றனர்...
கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.
ஆலயங்கள்
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் கமுதி சத்திரிய நாடார்கள் உறவின்முறையினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலிம் மக்கள், இந்து சேர்த்து வழிபட கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது
பிரசித்தி பெற்ற விழாக்கள்
வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.
விக்கி மேப்பியாவில் கமுதிக் கோட்டை
நீர் நிலைகள்
கமுதியில் குண்டாறு பாய்கிறது. மேலும் கண்ணார்பட்டி ஊருணி, செட்டிஊருணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்தில் மட்டுமே நிறைகின்றன.
மேலும் பார்க்கவும்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கமுதி பேரூராட்சி
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)