வல்லிக்கண்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வல்லிக்கண்ணன்
வல்லிக்கண்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ரா. சு. கிருஷ்ணசாமி
பிறப்புபெயர் ரா. சு. கிருஷ்ணசாமி
பிறந்ததிகதி (1920-11-12)நவம்பர் 12, 1920
பிறந்தஇடம் ராஜவல்லிபுரம், தமிழ்நாடு
இறப்பு 9 நவம்பர் 2006(2006-11-09) (அகவை 85)
புனைபெயர் வல்லிக்கண்ணன்
பணி எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
வகை சிறுகதை, மொழிபெயர்ப்பு கதைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள் சாகித்திய அகாதமி விருது (1978)
கையொப்பம் Vallikannan signature.jpg

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.[1] எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

நூல்கள்

அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.[2]

வல்லிக்கண்ணனின் நூல்கள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

கவிதை

  • அமர வேதனை - 1974

சிறுகதை

  • கல்யாணி முதலிய கதைகள் - 1944
  • நாட்டியக்காரி - 1946
  • ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - 1946
  • மத்தாப்பு சுந்தரி - 1948
  • வல்லிக்கண்ணன் கதைகள் - 1954
  • ஆண்சிங்கம் - 1964
  • வாழ விரும்பியவன் - 1975
  • அருமையான துணை - 1991
  • வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு தொகுப்பு) - 1991
  • மனிதர்கள் - 1991
  • சுதந்திரப் பறவைகள் - 1994
  • பெரிய மனுஷி (பால புத்தக வரிசை) (பல மொழிகளில்) - 1996
  • வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு + 1 கதைகள்) - 2000
  • தோழி நல்ல தோழி தான் - 2000
  • வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் - 2002
  • புண்ணியம் ஆம் பாவம் போம் சிறுகதைகள் - 2002
  • வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் - 2003

நாவல்

  • குஞ்சாலாடு (நையாண்டி பாரதி) - 1946
  • ராதை சிரித்தாள் - 1948
  • ஒய்யாரி - 1947
  • அவள் ஒரு எக்ஸ்ட்ரா - 1949
  • அத்தை மகள் - 1950
  • முத்தம் - 1951
  • செவ்வானம் (கோரநாதன்) - 1951
  • குமாரி செல்வா - 1951
  • சகுந்தலா - 1957
  • விடிவெள்ளி - 1962
  • அன்னக்கிளி - 1962
  • வசந்தம் மலர்ந்தது - 1965
  • வீடும் வெளியும் - 1967
  • ஒரு வீட்டின் கதை - 1979
  • நினைவுச்சரம் - 1980
  • அலைமோதும்கடலோரத்தில் - 1980
  • இருட்டு ராஜா - 1985
  • மன்னிக்கத் தெரியாதவர் - 1991
  • துணிந்தவன் - 2000

நாடகம்

  • நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) - 1948
  • விடியுமா - 1948

கட்டுரைகள்

  • உவமைநயம் - 1945
  • கோயில் களை மூடுங்கள் (கோரநாதன்) - 1946
  • ஈட்டிமுனை (கோரநாதன்) - 1946
  • அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) - 1947
  • சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) - 1947
  • கொடு கல்தா (கோரநாதன்) - 1948
  • எப்படி உருப்படும்? (கோரநாதன்) - 1948
  • கேட்பாரில்லை (கோரநாதன்) - 1949
  • அறிவின் கேள்வி (கோரநாதன்) - 1949
  • விவாகரத்து தேவைதானா? - 1950
  • நல்ல மனைவியை அடைவது எப்படி? - 1950
  • கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா? - 1950
  • கல்யாணம் இன்பம் கொடுப்பதா? துன்பத்தைக் கெடுப்பதா? - 1950
  • முத்துக்குளிப்பு - 1965
  • வல்லிக்கண்ணன் கட்டுரைகள் - மித்ர - 2004
  • வாசகர்கள் விமர்சகர்கள் - 1987
  • மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள் - 1987

இலக்கிய வரலாறு

  • பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை - 1981
  • சரஸ்வதி காலம் - 1986
  • எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும் - 1986
  • தமிழில் சிறு பத்திரிகைகள் - 1991
  • தீபம் யுகம் - 1999
  • புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - 1977

வாழ்க்கை வரலாறு

  • புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) - 1987
  • ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் - 1995
  • எழுத்து சி.சு. செல்லப்பா - 2002
  • எழுத்துலக நட்சத்திரம் (தீபம்) நா. பார்த்த சாரதி - 2005
  • தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் - 2003
  • நம் நேரு - 1954
  • விஜயலஷ்மி (வரலாறு) - 1954

தன் வரலாறு

  • வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் - 1988
  • காலத்தின் குரல் (60 கேள்விகளுக்கு பதில்) - 1980
  • வல்லிக்கண்ணன் கடிதங்கள் - 1999
  • வாழ்க்கைச் சுவடுகள் (தன் வரலாறு) - 2001
  • நிலைபெற்ற நினைவுகள் - 2005

மொழி பெயர்ப்பு

  • டால்ஸ்டாய் - 1956
  • கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்) - 1956
  • சின்னஞ்சிறுபெண் (கார்க்கி கட்டுரைகள்) - 1957
  • கார்க்கி கட்டுரைகள் - 1957
  • தாத்தாவும் பேரனும் - 1959
  • ராகுல் சாங்கிருத்யாயன் - 1986
  • ஆர் மேனியன் சிறுகதைகள் - 1991
  • சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் - 1995
  • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா - 2005

விருதுகள்

  • "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" கட்டுரை நூல் 1978-க்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.
  • "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூல் பரிசைப் பெற்றது.

உசாத்துணை

சான்றாவணங்கள்

மேற்கோள்கள்

  1. நூல் : தமிழ்ச் சொல்லாக்கம், சுரதா, பக்கம் 144
  2. அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” - ஞானியாரடிகள் தமிழ் மன்றம், சென்னை வெளியீடு. முதற்பதிப்பு 2000.

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=வல்லிக்கண்ணன்&oldid=5791" இருந்து மீள்விக்கப்பட்டது