மடு முழுங்கி
Jump to navigation
Jump to search
| மடு முழுங்கி |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 175 - 180 நாட்கள் |
| மகசூல் |
| ஏக்கருக்கு 20 மூடைகள் |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
மடு முழுங்கி (Madu Muzhungi) என்பது, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றாகும்.[1] இது மழை மற்றும் வெயில் காலங்களில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வகையாகும். மேலும், புயல் மற்றும் அடை மழைக் காலங்களில் நிலத்தில் சாயாமல் செங்குத்தாக வளரக்கூடியது.[2]
பின்னணி
நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 175 – 180 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. நெல் பழுப்பு நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 20 மூடைகள் மகசூல் தருவதாக கூறப்படும் இதன் அரிசியில், இரும்புச் சத்து, நார்ச் சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன என்றும், இதனால் குருதிச்சோகை, கெட்ட கொழுப்பு கரைதல், எலும்பு தேய்மானம், நீரிழிவு நோய் ஆகிய பல வித நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையதாக கருதப்படுகிறது.[2]
புற இணைப்புகள்
சான்றுகள்
- ↑ Phytonutrients analysis in ten popular traditional Indian rice landraces (Oryza sativa L.)
- ↑ 2.0 2.1 "பருவங்களை தாங்கி வளரும்'மடுமுழுங்கி' ரக நெல்". www.dinamalar.com (தமிழ்) - ஆக 24, 2022. Retrieved 2025-09-10.