சம்பத் ராம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சம்பத் ராம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999 – தற்போது வரை[1]
உயரம்6 அடி 0.5 அங்[1]

சம்பத் ராம் (Sampath Ram) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் எதிர்மறை பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர்.[2]

தொழில்

தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட எத்தனை மனிதர்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் இவர் மூர்க்கனாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] இவர் முதல்வன் (1999) மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். அதில் இவர் காவல்துறை துணை ஆய்வாளராக நடித்தார். இருப்பினும், அப்படம் இவருக்கு ஒரு பெரிய வளர்ச்சியை வழங்கத் தவறிவிட்டது. தீனா (2001) படப்பிடிப்பில் ராம் தலையில் காயம் ஏற்பட்டது. தீனாவுக்குப் பிறகு, இவர் பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, திமிரு புடிச்சவன் (2018) படத்தில் ராம் ஒரு கனமான பாத்திரத்தில் நடித்தார். திமிரு புடிச்சவனுக்குப் பிறகு, காஞ்சனா 3 இல் அகோரியாக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார்.[3] ராம் தட்ரோம் தூக்குறோமில் நடிக்க கையெழுத்திட்டார், அப்படத்தில் இவர் முக்கிய எதிர் பாத்திரத்தில் நடிக்கிறார்.[4] இவரது இருநூறாவது படமான கசகசா படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.[5]

திரைப்படவியல்

படங்கள்

(2001)

தொலைக்காட்சி

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சம்பத்_ராம்&oldid=21734" இருந்து மீள்விக்கப்பட்டது