யுகதர்மா
| இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
| இந்து சமயம் |
|---|
யுகதர்மா (Yugadharma) (சமக்கிருதம்: युगधर्म) என்பது இந்து மெய்யியலில் ஒரு காலகட்டத்திற்கான தருமம் அல்லது வாழ்வியல் வழிமுறை ஆகும்.[1][2] யுகதர்மத்தின் கருத்தானது சனாதன தர்மத்தின் பிரதிபலிப்பாக குறிப்பிடப்படுகிறது. இது காலத்தைக் கடந்த நித்திய தர்மமாகக் குறிப்பிடப்படுகிறது.[3]
இந்து நூல்கள் சுருதி (வேதங்களைப் போன்றவை) காலமற்றவை என்று கருதப்படுகின்றன, மற்றும் ஸ்மிருதி (மனுஸ்மிருதி) போன்ற இரண்டாம் நிலை நூல்கள் குறைந்த அதிகாரபூர்வமானவை மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும். சனாதன தர்மம் சுருதி நூல்களை அடிப்படையாகக் கொண்டது, யுகதர்மா ஸ்மிருதி நூல்களை அடிப்படையாகக் கொண்டது.
இலக்கியம்
சத்ய யுகத்தில் விஷ்ணு தியானம், த்ரேதாயுகத்தில் தியாகம் செய்தல், துவபார யுகத்தில் கோவிலில் வழிபாடு செய்தல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தகுதி, தற்போதைய யுகத்தில் கிருஷ்ணரின் பெயரை உச்சரிப்பதன் மூலம் அடையப்படும் என்று பாகவத புராணம் கூறுகிறது.[4]
குறிப்பிட்ட யுகத்தில் யுகதர்மம் பின்பற்றப்படாத போதெல்லாம், விஷ்ணு பூமியில் அவதாரம் எடுத்து, யுகத்தின் நடைமுறைகளின்படி செயல்படுகிறார் என்று வாயு புராணம் கூறுகிறது.[5]
விளக்கங்கள்
கலியுகம் என்று அழைக்கப்படும் தற்போதைய யுகாதர்மா இந்து மதத்தின் மரபுகளினூடாக விளக்கப்படுகிறது.
கௌடிய வைஷ்ணவ மதம்
வைஷ்ணவ மதத்தை பின்பற்றுபவர்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தின் கூட்டு நடனம், பாடல் மற்றும் ஜபம் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டிய யுகாதர்மா என்று நம்புகின்றனர்.[6]
ஸ்ரீ வைஷ்ணவம்
ஸ்ரீ வைஷ்ணவத்தை பின்பற்றுபவர்கள், வேதங்களின் விளக்கத்தின்படி, <i id="mwVQ">பஞ்சசம்ஸ்காரம்</i> எனப்படும் சடங்கு மூலம் சரணாகதி செய்வதே பின்பற்ற வேண்டிய யுகதர்மம் என்று நம்புகின்றனர். வேதக் குறிப்புகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட யுகதர்மத்தின் மற்றொரு முக்கிய பகுதி அஷ்டகாஷர மந்திரம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிப்பது ஆகும்.[7] விஷ்ணுவின் வடிவமான வெங்கடேஸ்வரனிடம் பக்தி செலுத்துவது கலியுகத்திற்கான யுகதர்மமாகவும் கருதப்படுகிறது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Prasad, Rajendra (2009). A Historical-developmental Study of Classical Indian Philosophy of Morals (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 98. ISBN 978-81-8069-595-7.
- ↑ Easwaran, Eknath (2020-11-10). The Bhagavad Gita for Daily Living: A Verse-by-Verse Commentary: Vols 1–3 (The End of Sorrow, Like a Thousand Suns, To Love Is to Know Me) (in ஆங்கிலம்). Nilgiri Press. p. 1113. ISBN 978-1-58638-145-5.
- ↑ Mehta, Rohit (1970). The Call of the Upanishads (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. p. 201. ISBN 978-81-208-0749-5.
- ↑ Bromley, David G. (1989). Krishna Consciousness in the West (in ஆங்கிலம்). Bucknell University Press. p. 67. ISBN 978-0-8387-5144-2.
- ↑ Patil, Rajaram D. K. (1973). Cultural History From The Vayu Purana (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishers. p. 71. ISBN 978-81-208-2085-2.
- ↑ Lewis, James R.; Petersen, Jesper Aagaard (2014). Controversial New Religions (in ஆங்கிலம்). Oxford University Press. p. 146. ISBN 978-0-19-931531-4.
- ↑ Bryant, Edwin F. (2017-07-11). Bhakti Yoga: Tales and Teachings from the Bhagavata Purana (in ஆங்கிலம்). Farrar, Straus and Giroux. p. 31. ISBN 978-0-374-71439-0.