மறைமலையடிகளார் விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மறைமலையடிகளார் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தனித் தமிழில் படைப்புகள் அருகிவரும் நிலையில் தனித் தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 புலவர் ப.முத்துக்குமாரசுவாமி 2019

ஆதாரம்

  • தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம் [1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மறைமலையடிகளார்_விருது&oldid=19284" இருந்து மீள்விக்கப்பட்டது