பறளியாறு
பறளியாறு தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் ஓர் ஆறு.இவ்வாறானது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பஃறுளி ஆறாகும்.பஃறுளி ஆறே பறளி ஆறாக திரிந்துள்ளது. இந்த ஆறு மகேந்திர கிரி மலையில் உற்பத்தியாகிப் பாய்கிறது. இவ்வாற்றின் மீது மாத்தூர் அருகே தொட்டிப்பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும் பெருஞ்சாணி அணையும் இவ் ஆற்றின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள பழமையான ஆறுகளில் ஒன்று.[சான்று தேவை][1][2][3]
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
மேற்கோள்கள்
- ↑ B. S. Baliga (1957). Madras District Gazetteers: Kanniyakumari District. p. 6.
- ↑ Economic and Political Weekly. Vol. 17. 1982.
- ↑ "City Corporate cum Business Plan for Kuzhithurai" (PDF). Directorate of Municipal Administration.