வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
| வரிசை 53: | வரிசை 53: | ||
7.தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி'ஆபத்தாராண புரம். |
7.தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி'ஆபத்தாராண புரம். |
||
8.குருகுலம் மேல்நிலைப்பள்ளி ,நெய்வேலி சாலை, வடலூர். |
8.குருகுலம் மேல்நிலைப்பள்ளி ,நெய்வேலி சாலை, வடலூர். |
||
4.சந்தை. |
|||
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. |
|||
காலை 6.மணி முதல் 10 மணி வரை கோழி,ஆடுகள்,மாடுகள் விற்பனையாகும்.10 மணிக்குமேல் |
|||
காய்கறி விற்பனை தொடங்கி இரவு 10 மணி வரை தொடரும். |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
01:41, 17 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். |
| வடலூர் | |
| அமைவிடம் | |
| நாடு | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கடலூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 25,902 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வடலூர் (ஆங்கிலம்:Vadalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் ==வடலூர் பேரூராட்சி== வடலூர் பேரூராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர்.சி.காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர்.கே.மூர்த்தி நகர், என்.எல்.சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பாசனம்
பேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.
போக்குவரத்து
வடலூர் சென்னை-கும்பகோணம் சாலையும், கடலூர்-சேலம் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவண்னாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, காட்டுமன்னார் கோயில் ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து திருச்சி, சேலம், மேட்டூர் ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
கோயில்கள்
இராமலிங்க அடிகளால் வடலூரில் 25.1.1872 ல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது.இறைவன்
ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத பூச நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார்.மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப் படுகிறது.அன்று ஏராளமான ம்க்கள் அன்னதானம் செய்வார்கள். 2.பிடாரி அம்மன்.
வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு
கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர்.பிடாரி அம்மன் கோயி லுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.
3.கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது.இநத அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும்,குலதெவமாகவும் இருந்து
வருகிறாள்.
கல்வி நிறுவனங்கள்.
வடலூரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.
1.அரசு உயர்நிலைப்பள்ளி,ஆபத்தாரணபுரம். 2.அரசு மேல்நிலைப்பள்ளி,புதுநகர். 3.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,நெய்வேலி சாலை,வடலூர். 4.அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,நெய்வேலி சாலை,வடலூர். 5.எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,சிதம்பரம் சாலை, வடலூர். 6.எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,சிதம்பரம்சாலை,வடலூர். 7.தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி'ஆபத்தாராண புரம். 8.குருகுலம் மேல்நிலைப்பள்ளி ,நெய்வேலி சாலை, வடலூர். 4.சந்தை.
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.
காலை 6.மணி முதல் 10 மணி வரை கோழி,ஆடுகள்,மாடுகள் விற்பனையாகும்.10 மணிக்குமேல் காய்கறி விற்பனை தொடங்கி இரவு 10 மணி வரை தொடரும்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
