மு. பெருமாள்
Jump to navigation
Jump to search
மு. பெருமாள் (பிறப்பு அக்டோபர் 5, 1942) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். மு. அன்புச்செல்வன் எனும் புனைப்பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் எழுத்தராகப் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வின் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். தற்போது மக்கள் ஓசை இதழில் சிறுகதைப் பகுதிக்குப் பொறுப்பாக உள்ளார்.