பொன்னவன் கனாநூல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பொன்னவன் கனாநூல் [1] என்னும் நூலிலிருந்து நான்கு பாடல்களை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் பேற்கோளாகத் தருகிறார். [2] கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைமைந்த 30 பாடல்கள் இந்த நூலில் மண்டலித்து வருகின்றன. [3] இந்த நூலின் ஆசிரியர் பொன்னவன் என்பதை இந்த நூலின் பாடல்களில் ஒன்று தெரிவிக்கிறது. [4] இது பிரகஸ்பதி என்பவரால் வடமொழியில் செய்யப்பட்ட கனவு நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். [5] அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த 'கணபுரத் தேவன்' என்பவன் தமிழில் சொல்லப் பொன்னவன் நூலாக்கினார் எனத் தெரிகிறது. கணபுரத்தேவன் இந்த நூலாசிரியர் பொன்னவனின் தந்தை. [6] இந்த நூல் நல்ல நடையில் உள்ளது. எனினும் 11 ஆம் நூற்றாண்டிதாக நாம் கருதத் நடை இதில் இல்லை.

செய்திகள்

இந்த நூல் சொல்லும் செய்திகள்

இன்ன யாமத்தில் கண்ட கனவு இன்ன காலத்துக்குள் பலன் தரும்.
இன்ன கனவு இன்ன பலனைத் தரும்

பாடல் - எடுத்துக்காட்டு [7]

விரை மலர்த் தாளில் செருப்பு மிதியடி மென் குடை என்று
உரை செயத் தக்கன கூறிய ஆயுதம் ஒண் கனவா
இரவிடைக் கண்டிடில் தான் பர தேசத்தில் யாத்திரை போம்
பரவிடத் தக்கன வாள் கேடு இவற்று இவை பற்றிடுமே [8]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 310. 
  2. அவை இந்தத நூலின் 2, 4, 10, 12 எண் கொண்ட பாடல்கள்
  3. இந்த நூல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக ரா. ராகவையங்கார் பதிப்பித்துள்ளார். இதன் இரண்டாம் பதிப்பு 1920-ல் வெளிவந்துள்ளது.
  4. "கட்டுரையார் மகப் பொன்னவன் சொன்ன கனவு நன்னூல்" - பாடல் 30
  5. "உம்பர் குரு பண்டு உரைத்த கனவு நூல்" - பாடல் 1
  6. இவற்றை விளக்கும் தொடர்கள்
    • அம்பர் கணபுரத் தேவன் சொன்னான் - பானல் 1
    • கணிதரும் எந்தை கணபுரத் தேவன் கட்டுலை - பாடல் 29
    • கட்டுரையார் மகப் பொன்னவன் சொன்ன கனவு நன்னூல் எட்டும் இரண்டும் இருபதும் - பாடல் 30
  7. பொருள் நொக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  8. பாடல் 17
"https://tamilar.wiki/index.php?title=பொன்னவன்_கனாநூல்&oldid=17467" இருந்து மீள்விக்கப்பட்டது