பெருந்துறை
| பெருந்துறை | |||||||
| — நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°16′29″N 77°34′58″E / 11.274600°N 77.582700°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சித் தலைவர் | ஓசிவி.இராஜேந்திரன்
(திமுக) | ||||||
| சட்டமன்றத் தொகுதி | பெருந்துறை
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் |
சி. ஜெயக்குமார் (அதிமுக) | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
24,930 (2011[update]) • 1,066/km2 (2,761/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
23.39 சதுர கிலோமீட்டர்கள் (9.03 sq mi) • 303 மீட்டர்கள் (994 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/perundurai | ||||||
பெருந்துறை (Perundurai) என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது பெருந்துறை வட்டம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது. பெருந்துறை நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
முக்கிய சாலைகள்
- கோவை சாலை
- ஈரோடு - பெருந்துறை சாலை
- பவானி சாலை
- குன்னத்தூர் சாலை
- சென்னிமலை சாலை
- பழைய பேருந்து நிலைய சாலை
- வெள்ளோடு சாலை
- காஞ்சிகோவில் சாலை
அமைவிடம்
ஈரோடு மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையம், மற்றும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், ஈரோடு சோலார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
நிருவாகம்
பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[4][5] இந்த ஊரானது பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6] [7]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,675 வீடுகளும், 24,930 மக்கள்தொகையும் கொண்டது. [8]
பொருளாதாரம் - தொழில்வளம்
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பொறியியல் தயாரிப்புகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு பின்னலாடை தொழில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சேலம்-ஈரோடு-கோயம்புத்தூர்-கொச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 544ன் புறவழிச்சாலை இந்தப் பகுதி வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.
கல்வி
பள்ளிகள்
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி
- சாகர் பன்னாட்டுப் பள்ளி
- ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
- காருண்யா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கல்லூரிகள்
வழிபாட்டுத் தலங்கள்
1.பெருந்துறை முனியப்பசாமி கோயில்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
- ↑ 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
- ↑ "திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025.
- ↑ பெருந்துறை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Perundurai Population Census 2011