அ. வரதநஞ்சைய பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அ. வரதநஞ்சைய பிள்ளை (செப்டம்பர் 1, 1877 - ஜூலை 11, 1956) அப்பசாமிப் பிள்ளை, வரதாயி என்பார்க்கு மகனாகப் பிறந்தார். தமிழுடன் தெலுங்கையும் வடமொழியையும் நன்கு அறிந்தவர். விரைந்து கவிபாடுவதில் வல்லவர். கரந்தைச் தமிழ்ச் சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர். கற்றோரால் ‘புலவரேறு’ என்று சிறப்பிக்கப் பெற்றார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் ’தங்கத் தோடா’ பரிசளிக்கப் பெற்றார். தமிழவேள் உமா மகேசுவரனார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இவர் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். அந்நூலை கரந்தைச் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொழுது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார்.

இயற்றிய நூல்கள்

  • தமிழரசி குறவஞ்சி[1][2]
  • கருணீக புராணம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அ._வரதநஞ்சைய_பிள்ளை&oldid=25940" இருந்து மீள்விக்கப்பட்டது