பாவியூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 23:31, 8 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
 பாவியூர்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

பாவியூர் என்பது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைக் கிராமமாகும். பாவியூர் என்ற பெயரில் உள்ள பாவி என்ற சொல்லுக்கு குறும்பா மொழியில் கிணறு என்று பொருள்.

பாவியூரானது கோத்தகிரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழ்கோத்தகிரியில் இருந்து, கரிக்கையூர் செல்லும் வழியில் பத்தாவது கிலோமீட்டரில் உள்ள கொண்டை ஊசி வளைவில் இருந்து பிரிந்து செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டரில் உள்ளது. இக்கிராமத்தில் மொத்தம் 130 ஆதிவாசிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பப்பள்ளி இருக்கிறது. மேற்கொண்டு படிக்க, கீழ் கோத்தகிரிக்கோ, மேல் கோத்தகிரிக்கோ செல்லவேண்டும்.[1] இவ்வூர் மக்கள் காய்கறித் தோட்டம் பராமரிப்பது, தேனீ வளர்ப்பது, அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குப் போவது ஆகிய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

  1. பாலு சத்யா (18 செப்டெம்பர் 2013). "குறும்பர் வாழ்வு… பேசும் ஓவியங்கள்!". கட்டுரை. குங்குமம் தோழி. Retrieved 8 சூலை 2018.
  2. ஆன்மன் (சூலை 6 2018). "ஆதியின் அழகான தடங்கள்". இந்து தமிழ், இளமை புதுமை இணைப்பு: 3. 
"https://tamilar.wiki/w/index.php?title=பாவியூர்&oldid=433448" இலிருந்து மீள்விக்கப்பட்டது