தேராதூன்
| தேராதூன் देहरादून | |
| — தலைநகரம் — | |
| அமைவிடம் | 30°20′N 78°04′E / 30.33°N 78.06°E |
| நாடு | |
| மாநிலம் | உத்தராகண்ட் |
| மாவட்டம் | தேராதூன் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்களவைத் தொகுதி | தேராதூன் |
| மக்கள் தொகை | 447,808 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 635 மீட்டர்கள் (2,083 அடி) |
| இணையதளம் | dehradun.nic.in/ |
தேராதூன் (Dehradun; இந்தி: देहरादून; ⓘ, தெஹ்ரா தூன்) அல்லது டேராடூன் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமாகும். இதுவே அம்மாநிலத்தின் பெரிய நகரமும் ஆகும். இது இமயமலைக்கும் சிவாலிக் மலைக்கும் இடையே டூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. புது தில்லியிலிருந்து 230 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.
இந்நகரில் பல புகழ் பெற்ற கல்வி நிலையங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளன.
- வன ஆராய்ச்சி மையம்
- இராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி
- இந்திய ராணுவ அகாடமி
- இந்திய வனவிலங்கு மையம்
- இந்திரா காந்தி தேசிய வன அகாடமி
என்பன சில.

இங்கு தனியார் நடத்தும் டூன் பள்ளி உள்ளது. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி, மணி சங்கர் ஐயர், கரண் சிங், கமல் நாத், நவீன் பட்நாய்க், அமரிந்தர் சிங், விக்ரம் சேத், பிரணாய் ராய், கரண் தபார் ஆகியோர் இங்கு படித்தவர்களே.
போக்குவரத்து
இலக்கியப்பதிவுகள்
புகழ்பெற்ற எழுத்தாளரான ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) தமது பல கதைகளில் இப்பகுதிகளை மையமாக வைத்து எழுதியுள்ளார்.