Test4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25: வரிசை 25:
File:Abraham_Thomas_Kovoor.jpg|''[[ஆபிரகாம் கோவூர்]]''
File:Abraham_Thomas_Kovoor.jpg|''[[ஆபிரகாம் கோவூர்]]''
</gallery>
</gallery>


{{தகவற்சட்டம் நபர்
|name = ச. பொன்னுத்துரை
|image = Tamil Writer S Po.png
|caption =
|birth_name = சண்முகம் பொன்னுத்துரை
|birth_date = {{Birth date|1932|5|24|df=y}}
|birth_place = நல்லூர், யாழ்ப்பாணம்
|death_date = {{Death date and age|2014|11|26|1932|5|24}}
|death_place = [[சிட்னி]], [[ஆத்திரேலியா]]
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[அவுஸ்திரேலியா]]
|other_names =[[இலங்கைத் தமிழர்]]
|known_for = [[ஆசிரியர்]], எழுத்தாளர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''எஸ்பொ''' என அறியப்படும் '''ச. பொன்னுத்துரை''' (24 மே 1932 - 26 நவம்பர் 2014) [[ஈழம்|ஈழத்தின்]] மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து [[ஆத்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் வாழ்ந்து வந்தார். [[சென்னை]]யில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

== வாழ்க்கைச் சுருக்கம்==
[[யாழ்ப்பாணம்]], [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூரில்]] சண்முகம் என்பவருக்குப் பிறந்த இவர் [[சென்னை கிறித்துவக் கல்லூரி]]யிலும் தமிழ்நாடு [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்]] உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் [[மட்டக்களப்பு]]க்கு இடம் பெயர்ந்தார். [[நைஜீரியா]]விலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

== எழுத்துலகில் ==
தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது அண்ணன் தம்பையா ஞானோதயம் என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை [[வீரகேசரி]]யில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் [[சுதந்திரன்]] பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.<ref name="pathivu">{{cite web | url=http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2451%3A2014-11-27-00-36-04&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68 | title=சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான். ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. | publisher=பதிவுகள் | date=26 நவம்பர் 2014 | accessdate=28 நவம்பர் 2014 | author=[[லெ. முருகபூபதி|முருகபூபதி, லெ.]] | archive-date=2015-06-19 | archive-url=https://web.archive.org/web/20150619232030/http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2451%3A2014-11-27-00-36-04&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68 |url-status=dead}}</ref>

இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய [[வ. விஜயபாஸ்கரன்|வ. விஜயபாஸ்கரனின்]] முயற்சியால் இந்நூல் வெளியானது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார்.<ref name="pathivu"/> புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார்.

[[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960களில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், [[வ. அ. இராசரத்தினம்]] போன்ற சிலரும் வெளியேறினர்.<ref name="pathivu"/>

சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.<ref name="pathivu"/>

ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற [[செனகல்]] நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் [[நுகுகி வா தியங்கோ]] என்ற [[கென்யா]] நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் [[ஞானம் (இதழ்)|ஞானம்]] இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் ''தீதும் நன்றும் பிறர்தர வரா'' என்ற தலைப்பில் 2007 இல் நூலாக வெளியானது.

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய ''இனி ஒரு விதி செய்வோம்'' என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் ''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். [[சென்னை]]யில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.

== விருதுகள் ==
இவருக்கு [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டத்தின்]] 2010 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் [[இயல் விருது]] வழங்கப்பட்டது.

== படைப்புகள் ==
* வீ (சிறுகதைகள்)
* ஆண்மை (சிறுகதைத் தொகுதி)
* தீ (நாவல்)
* சடங்கு (நாவல்)
* அப்பையா
* எஸ்.பொ கதைகள்
* கீதை நிழலில்
* அப்பாவும் மகனும்
* வலை + முள்
* பூ
* தேடல்
* முறுவல்
* இஸ்லாமும் தமிழும்
* பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்)
* மத்தாப்பு + சதுரங்கம்
* ?
* நனவிடை தோய்தல்
* நீலாவணன் நினைவுகள்
* இனி ஒரு விதி செய்வோம்
* வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
* ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
* மாயினி
* மணிமகுடம்
* தீதும் நன்றும்
* காந்தீயக் கதைகள்
* காந்தி தரிசனம்
* மகாவம்ச (மொழிபெயர்ப்பு)

== மறைவு ==
எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று [[சிட்னி]] கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்<ref>{{cite web | url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37509| title=Es Po passes away in Australia| publisher= தமிழ்நெட் | date=26 நவம்பர் 2014 | accessdate=28 நவம்பர் 2014}}</ref>. இவரது ஒரு மகன் [[ஈழப்போர்|ஈழப்போரின்]] போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]]ப் போராளி ஆவார்.

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
* [http://www.viruba.com/atotalbooks.aspx?id=133&name=எஸ்.பொ எஸ்பொ'வின் நூல்கள்]
* [http://amuttu.net/viewArticle/getArticle/356 வார்த்தைச் சித்தர்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150117204124/http://amuttu.net/viewArticle/getArticle/356 |date=2015-01-17 }}, [[அ. முத்துலிங்கம்]]
* [http://arunmozhivarman.com/2015/04/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/ மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ]

[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆத்திரேலிய இலங்கைத் தமிழ் வம்சாவளி மக்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள்]]

06:53, 25 நவம்பர் 2025 இல் நிலவும் திருத்தம்

"https://tamilar.wiki/w/index.php?title=Test4&oldid=353348" இலிருந்து மீள்விக்கப்பட்டது