வீ. செல்வத்துரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீ. செல்வத்துரை (பிறப்பு: பிப்ரவரி 29 1936) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். கிரேக்கொ, திக்காசுக்கு, அஞ்சலட்டை போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரியுமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. "கோமாளி", "மக்கள் ஓசை" இதழ்களில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.

பரிசில்களும், விருதுகளும்

தங்கப் பதக்கம் - செலாங்கூர், கூட்டரசுப் பிரதேச எழுத்தாளர் வாசகர் இயக்கம்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வீ._செல்வத்துரை&oldid=6422" இருந்து மீள்விக்கப்பட்டது