வீரபாண்டியன் நாண்மங்கலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீரபாண்டியன் நாண்மங்கலம் [1] (வீரபாண்டியன் நாள்மங்கலம்) என்னும் நூல் காசிக்கலியன் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்பதைத் தென்காசி விசுவநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடும் நூல் ஆகும்.

நாள் மங்கல ஆவணப் பாடல்

சீர் கொண்ட செங் கமலை வாழத் திரை ஆடை
பார் கொண்ட வீரபாண்டியன் என் - நேர் கொண்ட
கான் உலாம் மாலைக் கனக மகுடம் புனைந்தான்
மானவே வாள் அயிரா மன். [2]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 285. 
  2. வெண்பா யாப்பில் அமைந்துள்ள இந்தப் பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது