வீரபாண்டியன் குடைமங்கலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீரபாண்டியன் குடைமங்கலம் [1] என்னும் நூல் காசிக்கலியன் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்பதைத் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடும் நூல் ஆகும்.

குடை மங்கல ஆவணப் பாடல்

சேண் உலவு வெண் திங்கள் செல்வன் எனத் 'தண்'என்று
நீள் நிலம் ஓர் ஏழும் நிழற்றுமே - பேணி வந்து
பூ வேந்தர் ஏத்தும் புகழ் வீரபாண்டியன் நம்
கோ வேந்தன் கொற்றக் குடை. [2]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 285. 
  2. வெண்பா யாப்பில் அமைந்துள்ள இந்தப் பாடல் பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது