வாதிரியார்
{{Infobox ethnic group |image= |image_caption= |poptime = |group = வாதிரியான் |popplace = தமிழ்நாடு |languages = தமிழ் |religions = இந்து
மாதிரியான் எ வாதிரியான் அல்லது வாதிரியார் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவர்.தாய் வழி கிளை வழி முறையை பின்பற்றும் சாதிகளுள் இவர்களும் ஒன்று., தூத்துக்குடி மற்றும் இராமநாடு திருநெல்வேலிலகன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் கோவில்களில் முதல்மரியாதையையும் பெற்று வருகின்றனர். கொண்டையங்கோட்டை மறவர் , கிளை வழி கள்ளர் , வாதிரியார்( கோழியர் )இல்லத்து பிள்ளைமார் , நால்குடி வேளாளர், கோட்டை பிள்ளைமார், போன்ற சமூக மக்கள் மட்டுமே இன்றும் தாய் வழி கிளை வழி முறையை பின்பற்றும் சமூகங்கள் ஆகும் கிளை வழி திருமணம் முறையை இன்றும் பின்பற்றுவதால் இவர்கள் அக்காள் மகளை திருமணம் செய்வதில்லை. வாதிரியார் சமூக மக்களின் பழக்கவழக்கங்கள் பிற சமூகங்களை காட்டிலும் வேறுபட்டது ஏழு தாய்க் கிளை களையும் 21 பட்டங்களையும் கொண்ட சமூகமாகும். தாய் கிளைகள் 1. பட்டன் கிளை 2. சைவன் கிளை 3. அருமை கொடி கிளை 4. நம் காளி கிளை 5. அருமைப் பணிந்தான் கிளை 6. ஆவிடைப் பணிந்தான் கிளை 7. கன்னிகை குறையான் கிளை
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் (எண் 72), இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.
வாத்தியார் சமூகத்தில் ஊர் தலைவர் "அம்பலக்காரர்" அல்லது "அம்பலார்" என்று அழைக்கப்படுவார். அவர் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு ஊர் மக்கள் கட்டுபடுவார்[1]
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக கிளை அம்பலங்கள் உண்டு[2]
வாதிரியார் சமூகத்தைப் பொறுத்தவரை கிளை வழிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர்.[3]
தொழில்
இச்சமூகத்தினர் பொதுவாக நெசவுத் தொழிலில் விவசாயம் பனையேறுதல்ல் ஈடுபட்டு வருகின்றனர்.[4] இவர்கள் கப்பல் பாய்மர துணிகளை நெசவு செய்ய கூடியவர்கள் ஆவர்.இவர்கள் பண்டைய காலத்தில் நெசவு தொழிலில் மிகவும் வல்லமை படைத்வர்கள் என கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலூ கூறுகிறார். அது மட்டுமின்றி இந்த வாதிரியார்கள் நெய்யும் துணி பெயர் கோழியர் என்று கீரேக்கத்தின் வரலாறு குறிப்பிடுகிறது. சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்.
வாழும் பகுதிகள்
தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், சாயர்புரம் , பரமன்குறிச்சி, ராயப்பபுரம் செந்திஅம்பலம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசிக்கின்றனர்.