மு. நல்லதம்பி
Jump to navigation
Jump to search
மு. நல்லதம்பி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மு. நல்லதம்பி |
---|---|
பிறந்ததிகதி | செப்டம்பர் 13, 1896 |
பிறந்தஇடம் | வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
இறப்பு | மே 8, 1951 | (அகவை 54)
பணி | தமிழாசிரியர், புலவர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | தமிழறிஞர் |
பெற்றோர் | முருகுப் பிள்ளை, தங்கம்மை |
பண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 - 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த மொழிபெயர்ப்பு இலங்கையில் தமிழ் பேசும் பிரதேசங்களில் படிக்கப்படுகின்றது[1]. சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.