புறத்திரட்டு
Jump to navigation
Jump to search
புறத்திரட்டு அல்லது நீதித்திரட்டு அல்லது பிரசங்காபரணம் என்பது ஒரு தமிழ் திரட்டு நூல். இது 15 ம் நூற்றாண்டில் திரட்டப்பட்டது. இந்த நூலில் 1570 செய்யுள்கள் உள்ளன. இதில் மறைந்து போன பல நூல்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. 1938இல் வையாபுரிப்பிள்ளை இந்த நூலைப் அச்சில் பதிப்பித்தார்.
இதில் உள்ள பாடல்களில் பதினெண்கீழ்க்கணக்குச் செய்யுட்களுக்குச் சிறந்த பாடம் கிடைத்ததால் “இது எனக்குக் கண்ணைக் கொடுத்த நூல்” என உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005