நட்டுவாங்கம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பரதநாட்டிய கச்சேரியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நட்டுவாங்கம். இது இரண்டு வட்ட வடிவிலான வெண்கல தட்டு கொண்டு அமைக்கப்படும். இதற்கு மரக்கட்டைகளை பயன்படுத்தும் போது இது தட்டவாடி அல்லது தாளவடி எனப்படும்.

நட்டுவனார்

கைத் தாளம் அல்லது தாள இசைக்கருவி கொண்டு தாளம் போடும் ஒருவர் நட்டுவனார் என அழைக்கப்படுகிறார்.[1] பொதுவாக இவரே குருவாக இருப்பார். நட்டுவனார் தாள ஜாதியுடன் இசையுடன் இசைந்து இருப்பது பரதநாட்டிய கச்சேரிக்கு இனிமை சேர்க்கும்.

முக்கியமானவர்கள்

நட்டுவனார்களில் மிக முதன்மையானவர்களான தஞ்சை நால்வர் எனப்படுபவர்கள்
தஞ்சை நால்வருக்குப் பின் புகழ்பெற்ற அறுவர்
  • பத்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • காட்டுமன்னார்கோவில் முத்துகுமாரசாமி பிள்ளை
  • தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை
  • வழுவூர் பி. இராமையா பிள்ளை
  • வைத்தீசுவரன் கோயில் முத்துசாமி பிள்ளை
  • திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளை

கே. ஜே. சரசா என்பவர் முதல் பெண் நட்டுவனார் ஆவார்[2]. இவர் வழுவூர் ராமைய்யா பிள்ளையின் மாணாக்கர் ஆவார்.

  • தஞ்சாவூர் ஹேரம்பநாதன்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நட்டுவாங்கம்&oldid=410515" இலிருந்து மீள்விக்கப்பட்டது