துருவனூர்
துருவனூர் கிராமம் Turuvanur Village | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 14°13′N 76°24′E / 14.22°N 76.40°E | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | சித்ரதுர்கா |
| வட்டம் | சித்ரதுர்கா |
| ஏற்றம் | 3,597 m (11,801 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 13,809 |
| மொழிகள் | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய ஒத்திசை நேரம்) |
துருவனூர் (Turuvanur) என்பது தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா வட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.[1][2]
மக்கள் தொகை
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி துருவனூரில் 13,809 பேர் இருந்தனர். அதில் ஆண்கள் 7,073 மற்றும் பெண்கள் 6,736 ஆகும்.
புவியியல்
துருவனூர் ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது வட்டம் மற்றும் மாவட்ட தலைமையகமான சித்ரதுர்காவிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராம ஊராட்சியானது சல்லகேர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தது.
வரலாறு
கிராமத்திற்கு இப் பெயர் வருவதற்கு காரணமான துருவப்ப தேவர் கோவிலானது முற்காலத்தில் இக்கிராம மக்களால் கட்டப்பட்டதாகும். சித்ரதுர்கா கிராமம் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகும். இங்குள்ள மக்கள் கால்நடைகளை (கோல்லாக்கள்) வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக தினமும் துருவனூர் அழைத்துக்கொண்டு வருவர்.
கர்சாடகாவின் முன்னாள் முதலமைச்சர் ச. நிசங்கலிப்பாவுக்கு "ஈச்சலு மரத சாலுவாலி" என்ற பெருமை காரணமாக துருவனூர் பெயர் பெற்றது. இவர் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடுவதற்காக முதலமைச்சர் பதவியை துறந்தார். போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக அரசு இப்பகுதியில் "காந்தி கோட்" என்ற நினைவுச் சின்னத்தை உருவாக்கியுள்ளது.
சொற்பிறப்பியல்
"துருவா" என்ற சொல்லுக்கு "குதிரை" என்று பொருள்.
கலாச்சாரம்
கர்நாடகாவின் மிகவும் பிரபலமான திப்பெருருத்ரா சுவாமி கோவில் திருவிழா இக்கிராமத்திலிருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள நாயக்கன அட்டியில் நடைபெறுகிறது. அருகிலுள்ள மக்களில் லிங்காயத்துகள், குஞ்சிதாக்கள், தேவாங்கங்கள், நாயக்கர்கள், கொல்லர்கள், (யாதவர்கள்) குருபாக்கள், மதிகா, போவி, உப்பரா, குஞ்சிடிகாக்கள் மற்றும் ரெட்டி ஆகியோர் அடங்குவர்.
பொருளாதாரம்
துருவனூர் கிராமத்தின் பெரும்பாலான மக்கள் விவசாயம் மேற்கொள்கின்றனர். இங்கு கரிசல் மண் பரவி உள்ளதால் பருத்தி பயிரிடுதலுக்கு ஏற்றதாக உள்ளது. அதோடு சோளம், துவரை போன்றவையும் விளைவிக்கப்படுகிறது. விவசாயமானது மழையை நம்பியுள்ளது. இங்குள்ள குருபா சமூகத்தை சார்ந்த மக்கள் செம்மறி ஆடுகளை வளர்ப்பதன் மூலம் செம்மறியாட்டின் கம்பளியிலிருந்து கையால் செய்யப்பட்ட செம்மறியாட்டு கம்பளி கைத்தறி பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Village code= 975900 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Retrieved 2008-12-18.
- ↑ "Yahoomaps India :". Retrieved 2008-12-18. Turuvanur, Chitradurga, Karnataka