தமிழ் ஹரிஜன் (இதழ்)
Jump to navigation
Jump to search
இதழாசிரியர் | வெ. இராமலிங்கம் பிள்ளை, பொ. திருகூடசுந்தரம் |
---|---|
வகை | காந்தியம் |
இடைவெளி | மாதம் ஒரு முறை |
முதல் வெளியீடு | 1946 |
நிறுவனம் | தமிழ்ப் பண்ணை |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தமிழ் ஹரிஜன் 1940 களில் இந்தியாவில் இருந்து கிழமை தோறும் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இது காந்தி நடத்திவந்த ஹரிஜன் இதழின் தமிழ்ப் பதிப்பாக இருந்தது. இதைத் தமிழில் கொண்டுவந்தவர் சின்ன அண்ணாமலை ஆவார். இதன் ஆசிரியராக பொ. திருகூடசுந்தரம் இருந்தார்.[1] இது அரிசனங்கள் என ஒதுக்கப்பட்டு வாழ்ந்த மக்களுக்காகக் குரல் கொடுத்த காந்தியடிகளின் கருத்துரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.