தமிழ்நெறி விளக்க உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்நெறி விளக்க உரை என்னும் நூலும் நூலாசிரியராலேயே செய்யப்பட்டது. இப்படி நூலும் உரையும் சேர்த்தே எழுதிய ஆசிரியர்களில் இந்த உரைநூலே காலத்தால் முந்தியதாகக் காணப்படுகிறது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு.

இந்த உரைநூலின் பாங்கு

  • இந்த நூலில் எட்டுவகை மணங்களை விளக்கும் இலக்கணப் பாடல் உள்ளது. இதற்கு உரை எழுதுகையில் சிற்றட்டகம் என்னும் நூலிலிருந்து மேற்கோள் பாடல்களைத் தந்து இந்த உரை விரிகிறது.
  • இவ்வுரை தரும் விளக்கங்களில் சில
    • அகச் செயலால் இருதலையும் தீரா அன்பினதாகிய காமம் அகப்பொருள்.
    • புறச் செயலால் நிகழும் மறம் புறப்பொருள்
    • அகம் புறம் ஆகிய இரண்டும் அறம் பற்றி நிகழும்.
    • அறத்தால் வீடுபேறு கிட்டும்.
  • ”இதற்கு மேல் கருதத் தக்க பகுதி இல்லை.” என்று இந்த உரை எழுதுவது இந்த உரைநூலின் நடைப்பாங்குகளில் ஒன்று.
  • உரைப்பகுதி ‘என்பது’ என்னும் சொல்லைக்கொண்டு முடிவுறுகிறது.

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்நெறி_விளக்க_உரை&oldid=17308" இருந்து மீள்விக்கப்பட்டது