ஞான. ராயப்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞான. ராயப்பன் (பி. 1934) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் முதல்வன், ஞானமணி, சக்திவடிவேலன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்டவர். மேலும் இவர் புலவர் அ. முத்தையனிடம் முறையாக யாப்பு இலக்கியம் பயின்றுள்ளவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசியப் பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்

  • வெண்பாப் போட்டிப் பரிசுகள்
  • உங்கள் குரல் இதழ் நடத்திய ஈற்றடி வெண்பாப் போட்டிப் பரிசு

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ஞான._ராயப்பன்&oldid=6282" இருந்து மீள்விக்கப்பட்டது