ஜவாலாமுகி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஜவாலாமுகி
பிறப்புவீரவள்ளி ராகவாச்சாரியுலு
ஏப்ரல் 18, 1938
சீதாரம்பாக், ஐதராபாத்து, தெலங்காணா
இறப்புDecember 14, 2008(2008-12-14) (aged 70)
சோமாஜிகுடா, தெலங்காணா
பணிகவிஞர், அரசியல் செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
சீதாதேவி
பிள்ளைகள்சம்பத் குமார், சிறீதர் வாசு

ஜவாலாமுகி என்பது வீரவல்லி ராகவாச்சாரியுலுவின் புனைபெயர் (18 ஏப்ரல் 1938) – 14 திசம்பர் 2008) ஆகும். இவர் ஓர் இந்தியக் கவிஞர், நாவலாசிரியர், எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார்.

வாழ்க்கை

ஜவாலாமுகி தனது ரங்கேய ராகவா லைப் இஸ்ட்ரி என்ற புதினத்துக்காக சாகித்ய அகாதமி விருதைப் (இந்தி) பெற்றார். இவரது புதினங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கவிதைகளில் வேலடின மந்தாரம், ஹைதராபாத் கதலு, வோடமி-திருகுபது ஆகியவை முக்கியமானவை.[1]

ஜவாலாமுகி "திகம்பர கவுலு" என்ற கவிஞர்களின் குழுவில் உறுப்பினராக இருந்தார். அவர்களின் கருத்துகளும் பாணியும் நவீன தெலுங்கு இலக்கிய வரலாற்றில் திருப்புமுணையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் 1970-ல் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் (விரசம்) இணை நிறுவனராகவும், மக்கள் ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பின் தீவிர உறுப்பினராகவும், இந்தியா-சீன நட்புறவுக் கழகத்தின் நிறுவனராகவும் இருந்தார். இவர் இறக்கும் வரை இந்தியா-சீனா நட்புறவுக் கழகத்தின் ஆந்திரப் பிரதேச செயலாளராகவும் தேசிய துணைத் தலைவராகவும் இருந்தார்.[2]

ஜவாலாமுகி ஐதராபாத்தில் உள்ள சீதாரம்பாக் பகுதியில் பிறந்தார். இவர் சீதாரம்பாக் குடியிருப்பாளர் நலச் சங்கத்தை நிறுவினார் மற்றும் லக்ஷ்மி நிவாஸ் கனேரிவாலை எதிர்த்தார்.[1] 1970-ல் விரசம் நிறுவப்பட்ட பிறகு, 1971-ல் ஜவாலாமுகி இரண்டு விரசம் சங்க உறுப்பினர்களுடன் தனது எழுத்துக்களுக்காக ஆந்திர தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.[3][4] இவரது கவிதைகளில் ஒன்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 99இன் கீழ் தடைசெய்யப்பட்டது. மேலும் இக்கவிதை வெளியான புத்தகத்தின் அனைத்து படிகளும் கைப்பற்றப்பட்டன.[3][4]

"அற்புதமான பேச்சாளரான, ஜவாலாமுகி ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பல தசாப்தங்களாக பரவலாக பயணம் செய்து உரை ஆற்றினார்" என்று தி இந்துவில் ஒரு கட்டுரை கூறுகிறது. "இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து முக்கிய சமூக இயக்கங்களுடனும் தொடர்புடையவர்."[2]

சில ஆண்டுகளாகக் கல்லீரல் ஈரல் அழற்சி நோய்க்கான சிகிச்சையிலிருந்த, ஜவாலாமுகி மாரடைப்பால், 2008 திசம்பர் 14, அன்று சோமாஜிகுடாவில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையில் இறந்தார். இவருடைய மனைவி சீதாதேவி, மகன்கள் சம்பத்குமார், ஸ்ரீதர், வாசு ஆவர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Jwalamukhi dies", article, The Times of India, 15 December 2008, retrieved 22 December 2008
  2. 2.0 2.1 "Revolutionary poet Jwalamukhi passes away", article, The Hindu, 15 December 2008, retrieved 22 December 2008
  3. 3.0 3.1 Kannabiran, K. G. The Wages of Impunity: Power, Justice and Human Rights. New Delhi: Orient Longman, 2004. p. 298, 300
  4. 4.0 4.1 Defining Right as Wrong பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், article at PUCL website
"https://tamilar.wiki/w/index.php?title=ஜவாலாமுகி&oldid=376880" இலிருந்து மீள்விக்கப்பட்டது