சோனித நாடு
Jump to navigation
Jump to search

சோனித நாடு (Sonita Kingdom ) அசுர மன்னர் நரகாசூரனின் மகன் பனாசூரனின் நாடாகும். பானாசூரனின் மகள் உஷா ஆவார். கிருஷ்ணரின் பேரன் அனிருத்திரன், உஷாவாவை மணந்தவர் ஆவார். சோனித நாடு, தற்கால அசாம் மாநிலத்தின் சோனிதபுரமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பாகவத புராணக் குறிப்புகள்
பாகவத புராணத்தில் ஜராசந்தன், தந்தவக்ரன், சிசுபாலன் ஆகியவர்களை கொன்ற கிருஷ்ணர், பானாசூரனையும் ஒரு போரில் வென்றார். [1] மேலும் பூமாதேவியின் மகனும், பிராக்ஜோதிச நாட்டின் அசுர மன்னரான நரகாசூரனையும் கிருட்டிணன் கொன்றார். [2]