கசர்கள்
Jump to navigation
Jump to search

கசர்கள் (Khasas) மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தில் அமைந்திருந்த நேபாளம், காஷ்மீரம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற இமயமலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் இந்திய ஆரியர்கள் ஆவார்.
மகாபாரதக் குறிப்புகள்
சீனர்கள், பகலவர்கள், யவனர்கள், சகர்கள், சவரர்கள், கிராதர்கள், சிங்களவர்கள் போன்ற மிலேச்சர்களுடன் சேர்த்து கசர்களையும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.[1]
குருச்சேத்திரப் போரில்
குருச்சேத்திரப் போரில் கச நாட்டுப் படைவீரர்கள், காம்போஜர்கள், சகர்கள் போன்ற மிலேச்சர்களுடன் இணைந்து, கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக நீண்ட வாட்களுடன் போரிட்டனர். (மகாபாரதம், உத்யோக பருவம், 5-161,162)
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ http://mahabharatham.arasan.info/ மகாபாரதம், ஆதி பருவம், 1: 177 & துரோண பருவம், 7: 11