கௌஹர் ஜான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கெளஹர் ஜான்
Gauhar Jaan.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஏஞ்சலினா எவர்டு
பிறப்பு(1873-06-26)26 சூன் 1873
ஆசாம்கார், உத்தர பிரதேசம், இந்தியா
இறப்பு17 சனவரி 1930(1930-01-17) (அகவை 56)
இந்தியா
இசை வடிவங்கள்கசல், தும்ரி, தாத்ரா
தொழில்(கள்)இசை, நடனம்
இசைத்துறையில்1900–1930

கெளஹர் ஜான் (Gauhar Jaan, 26 சூன் 1873 – 17 சனவரி 1930) கல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்துஸ்தானி இந்தியப் பாடகரும், நடனக் கலைஞரும் ஆவார். இவரின் இயற்பெயர் ஏஞ்சலினா எவர்டு (Angelina Yeoward) என்பதாகும். இந்தியாவில் முதன் முதலாக 78 rpm வேகத்தில் இயங்கும் கிராம்போன் இசைதட்டுகளில் இவரது பாடல்கள் பதியப்பட்டு இந்திய கிராமபோன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[1][2]

ஆரம்ப வாழ்க்கை

கெளஹர் ஜான் பிறப்பால் ஏஞ்சலினா எவர்டு என்று அறியப்படுபவர். 26 சூன் 1873 ஆம் ஆண்டில் ஆசாம்கார் என்னும் இடத்தில் ஆர்மீனிய வம்சாவழியில்[3] பிறந்தார். அவரது தந்தை வில்லியம் ராபர்ட் எவர்டு ஒரு உலர் பனிக்கட்டி ஆலையில் பொறியியலாளராக பணியாற்றினார். 1872 ஆம் ஆண்டில் கெளஹரின் தாயார் விக்டோரியா ஹெமிங்ஸை திருமணம் செய்து கொண்டார். விக்டோரியா பிறப்பால் ஒரு இந்தியப் பெண். மேலும் இந்திய இசை மற்றும் நடனத்தில் பயிற்சி பெற்றவர்.

துரதிருஷ்டவசமாக, வில்லியம் மற்றும் விக்டோரியாவிற்கும் இடையேயான திருமணம் உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. விக்டோரியா குர்ஷெத் என்ற ஒரு நண்பருடன் நட்பை வளர்த்தார். இதனால் ஏஞ்சலினாவின் பெற்றோர் 1879 இல் விவாகரத்து பெற்றனர். விவாகரத்து செய்த பிறகு, திருமதி. எவர்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, மாலக் ஜான் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார், மேலும் அவரது மகளுக்கு கௌஹர் ஜான் என்று பெயரிட்டார். கெளஹருக்கு "கௌரா" என்ற புனைப்பெயரை வைத்திருந்தார். கெளஹரின் தாயாரை "பாடி" மாலக் ஜான் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் அந்த நேரத்தில் மூன்று பிரபலமான மாலக் ஜான்ஸ் இருந்தார்கள், பாடி என்றால் அவர் மாலக் ஜான்களில் மூத்தவர் என்று குறிப்பிடப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கௌஹர்_ஜான்&oldid=7654" இருந்து மீள்விக்கப்பட்டது