கோணேஸ்வரி முருகேசபிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோணேஸ்வரி முருகேசபிள்ளை ( - 17.05.1997, அம்பாறை, கல்முனை) என்பவர் 1997, டிசம்பர் 17 ஆம் நாள் இலங்கை, அம்பாறை, சென்ரல் முகாமைச் சேர்ந்த இராணுவத்தால் பாலுறுப்பில் கிரனைட் எறிந்து, படுகொலை செய்யப்பட்ட நான்கு குழந்தைகளின் தாயான இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார்.

நிகழ்வு

இரு பிள்ளைகளின் தாயாரான 35 வயது நிரம்பிய திருமது கோணேஸ்வரி முருகேசபிள்ளை தனது குடும்பத்தாரின் முன்னிலையில் 21 ஆம் நாள் ஆவணி 97 இல் மத்திய முகாம் பகுதி போலீஸ் குழுவினரால் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார். பாலியல் வல்லுறவுக்கான அடையாளங்களை அழிக்கும் நோக்கில் சிங்களக் காவல்த்துறை கோணேஸ்வரியின் பிறப்புறுப்பில் வெடிகுண்டு வைத்து அவரைக் கொலை செய்ததாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர். இந்தப் பெண்ணின் பாலியல் வல்லுறவிலும் பின்னர் அரங்கேறிய படுகொலையிலும் சம்பந்தப்பட்ட எந்த போலீஸ் அதிகாரியும் இதுவரையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. [1] [2]

அரசு விசாரணை

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்