கா. கைலாசநாதக் குருக்கள்
Jump to navigation
Jump to search
கா. கைலாசநாதக் குருக்கள் (K. Kailasanatha Kurukkal பி: ஆகத்து 15, 1921 - இ: ஆகத்து 8, 2000) இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர்.
கா. கைலாசநாதக் குருக்கள் (K. Kailasanatha Kurukkal பி: ஆகத்து 15, 1921 - இ: ஆகத்து 8, 2000) இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர்.
ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். பரமேசுவராக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1948 ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார். ஆங்கிலம், தமிழ், இலத்தீன், பாளி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவர். செருமன், பிரெஞ்சு மொழிகள் தெரிந்தவர்.
இவர் கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது இவர் அதன் இந்து பண்பாட்டுத் துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப் பட்டார். மேலும் கலைத்துறையின் இணைத் தலைவராக சூன் 1976 தொடக்கம் டிசம்பர் 1978 வரை பணியாற்றினார் அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இராமநாதன் நுண்கலை அகாதமியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரை வாழ்நாள் பேராசிரியராக நியமித்தது. யாழ் பல்கலைக் கழகத்தால் அவ்வாறு முதன்முதலாக நியமிக்கப்பட்டவர் இவரே
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் குறிஞ்சிக் குமரன் கோவில் எழுப்பப் பட்டதற்கு உந்துசக்தியாக விளங்கினார்.
ஆகத்து 8, 2000ல் ஆத்திரேலியா விக்டோரியா மாகாணத்தில் காலமானார்.