கல்யாணசுந்தரர்
Jump to navigation
Jump to search
| சிவ வடிவங்களில் ஒன்றான | |
| கல்யாண சுந்திரர் | |
| மூர்த்த வகை: | மகேசுவர மூர்த்தம், உருவத்திருமேனி |
| விளக்கம்: | சிவபெருமானின் மணக்கோலம் |
| இடம்: | கைலாயம் |
| வாகனம்: | நந்தி தேவர் |
கல்யாணசுந்தரர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.[1]

உருவக் காரணம்
பார்வதியின் தவத்தினால் சிவபெருமான் அந்தணராகத் தோன்றி, பார்வதி மணம் செய்து கொள்வதாகக் கூறினார். ஆனால் பார்வதி இவ்வாறான தோற்றத்தோடு வேண்டாம், சிவபெருமானாகவே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாள். சிவபெருமான் தன்னுடைய புலித்தோல் ஆடையும், ரிசப வாகனத்திலும் தோன்றி, அவ்வாறே திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார்.
திருமண நாளன்று, அனைவரும் வடதிசைக்கு வரத் தென்திசை தாழ்ந்தது. சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென்திசைக்குச் செல்லுமாறு கூறினார். பார்வதி, சிவபெருமான் திருமணம் நடந்தது.[1]
கோயில்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.