கல்பகம் சுவாமிநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கல்பகம் சுவாமிநாதன்
கல்பகம்-சுவாமிநாதன்.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு15 ஆகத்து 1922
சேதலப்பதி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 6, 2011(2011-04-06) (அகவை 88)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)வீணைக் கலைஞர், பேராசிரியை
இசைக்கருவி(கள்)வீணை
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
வீணை

கல்பகம் சுவாமிநாதன் (ஆகத்து 15, 1922 - ஏப்ரல் 6, 2011) தமிழ்நாட்டின் பிரபல வீணை இசைக்கலைஞரும் கருநாடக இசைப் பேராசிரியையும் ஆவார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், சேதலப்பதி கிராமத்தில் பிறந்தவர் கல்பகம். தனது எட்டாவது அகவையில் தாயார் அபயாம்பாளிடம் கருநாடக இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண ஐயர்[2], டி.எல். வெங்கடராம ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சார் ஆகியோரிடம் முறையாகக் கருநாடக இசையைப் பயின்றார்.

கல்பகம் சுவாமிநாதனை ஆசிரியத் தொழிலுக்குக் கொண்டு வந்தவர் டைகர் வரதாச்சாரியார். கலாசேத்திராவில் 1940கள், 1950களில் வீணை கற்பித்தார். 1964 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்து 1980 இல் பேராசிரியையாக இளைப்பாறினார்.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கல்பகம்_சுவாமிநாதன்&oldid=8340" இருந்து மீள்விக்கப்பட்டது