கண்மணி (இயக்குநர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்மணி
பிறப்பு19 சூன் 1980 (1980-06-19) (அகவை 44)[1]
பணிஇயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003-தற்போது வரை

கண்மணி என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ் படங்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, கண்மணி தெலுங்கு படங்களில் அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.

தொழில்

கண்மணி சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார், இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அவரிடம் குழுபாடகராகவும் பணியாற்றினார். அதன் பிறகு இவர் ஜெமினி (2002) படத் தயாரிப்பின் போது இயக்குநர் சரனின் கீழ் பயிற்சி பெற்றார். குறைந்த செலவில் எடுக்கபட்டபட்ட காதல் நகைச்சுவை திரைப்படமான ஆஹா எத்தனை அழகு (2003) படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இதில் மிதுன் தேஜஸ்வி, சார்மி கவுர் ஆகியோர் நடித்தனர். பின்னர் தெலுங்கில் நா ஓபிரி (2005), சின்னோடு (2006) ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். பின்னர் சமூக நாடகத் திரைப்படமான கால் சென்டர் (2008) மற்றும் காதல் நகைச்சுவை திரைப்படமான ஓடிபோலாமா (2009) ஆகியவற்றை இயக்கினார்.[2]

2015 ஆம் ஆண்டில் இவர் தெலுங்கு திரைப்படமான பீருவாவை உருவாக்கினார். பின்னர் தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்ற திகில் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கினார். [3][4]

திரைப்படவியல்

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
2003 ஆஹா எத்தனை அழகு தமிழ்
2005 நா ஓபிரி தெலுங்கு
2006 சின்னோடு தெலுங்கு
2008 கால் செண்டர் தெலுங்கு
2009 ஒடிபோலாமா தமிழ்
2013 சுக்கலந்தி அம்மாயி சக்கனைனா அப்பாய் தெலுங்கு
2015 பீருவா தெலுங்கு கூட கேமியோ
2016 பேய்கள் ஜாக்கிரதை தமிழ்
2018 தேசாமுதூர்ஸ்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்மணி_(இயக்குநர்)&oldid=20878" இருந்து மீள்விக்கப்பட்டது