ஆ. பூவராகம் பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899[1] - மே 28, 1973) தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்[2].

ஆற்றிய பணிகள்

சிதம்பரத்தில் உள்ள இராமசாமிசெட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கண உரையாசிரியர்

தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார்[3]. இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.

படைப்புகள்

வைணவம் தொடர்பாக இவர் படைத்த நூல்கள்- திருவாய்மொழி விளக்கம்[4], திருமங்கையாழ்வார் பெரிய திருமொழிஆகியன. மேலும்,' புலவர் பெருமை' எனும் நூலையும் இயற்றியுள்ளார்.

தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி 1 நூலின் கட்டுரையாளர்களில் ஒருவராக இருந்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.[5]

சிறப்புகளும் விருதுகளும்

தனிநாயக அடிகளார், பிள்ளையவர்களின் இலக்கணப் புலமையை அறிந்து, அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்து வீரமாமுனிவரின் ‘தொன்னூல் விளக்கம்’ எனும் இலக்கண நூலைப் பாடம் கேட்டதாகவும் சொல்லுவர்வார்ப்புரு:ஆதாரம். 16-8-1930 இல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசளித்து சிறப்பித்துள்ளது.[6]

மறைவு

மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

  1. நூல்:தமிழ்ச் சொல்லாக்கம், ஆசிரியர்: உவமைக் கவிஞர் சுரதா, பக்கம்: 190 [1]
  2. தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள் பரணிடப்பட்டது 2016-03-17 at the வந்தவழி இயந்திரம், முனைவர் இரா. வெங்கடேசன், நாள்: மே 15, 2015.
  3. [2]
  4. திருவாய்மொழி விளக்கம்: திருசிராப்பள்ளி வானொலியிற் பேசப்பெற்றவை, கூகுள் புக்சு
  5. விக்கிமூலம், கலைக்களஞ்சியம் 1, முதல் தொகுதி கட்டுரையாளர்கள்
  6. சீர்காழி வி.இராம்தாஸ்,' ஸ்ரீகாசிமடம் அருள் வரலாறு'
  • முனைவர் க.முருகேசன்,' இலக்கணச் சிங்கம் ஆ.பூவராகம்பிள்ளை, தினமணி- தமிழ்மணி 25-5-14.
"https://tamilar.wiki/index.php?title=ஆ._பூவராகம்_பிள்ளை&oldid=20350" இருந்து மீள்விக்கப்பட்டது